போலியோ சொட்டு மருந்து முகாம் (வருகிற ஞாயிற்றுகிழமை ) நடைப்பெறும் 2024 .

LASSIJOY

                     

''தமிழ்நாட்டில் வரும் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை,அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் உள்ளன. 

இதில் அனைத்து மையங்களிலும் நடைபெற உள்ளன . இந்த மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதை பெரிய  இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் கவனத்துடன் செய்யப்பட்டுள்ளன. யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்களும்  போலியோ முகாம் பணிகளுக்கு மிகவும் பக்க பலமாக இருந்து வருகின்றன . என்பது குறிப்பிடித்தக்கது. 


முக்கிய அம்சங்கள் சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்பதையும்  5 வயதிற்குள்ள குழந்தைகளுக்கும் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும் . தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். 

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். சமீபத்தில்  பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நடைபெறும் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் முக்கிமாகும். விடுபட்ட குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என்பதையும் தெரியபடுத்துகிறோம்.`


முகாம் நாளான ஞாயிற்ருக்கிழமை  போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளுக்கும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழ்  வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து கட்டாயமாக  வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது .போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும் எனவும்  போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் கஅமைப்புகள்  மூலமாக தொலைவில்  மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும்  சொட்டு மருந்து வழங்க அரசு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ,தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். 

எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழித்து விடுபட அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம். இவ்வாறு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments